மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வன உரிமைகள் சட்டம், 2006 என்பதை மாற்றியமைப்பதற்கான ஓர் அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிக்கையானது இந்திய அரசியலமைப்பின் அட்டவணை 5ன் கீழ் உள்ள தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரியமான வனவாசிக் குடும்பங்கள் வனப் பகுதிகளுக்கு அருகில் வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கு அனுமதிக்கின்றது.
இந்த முடிவானது அம்மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வனவாசிக் குடும்பங்களுக்கு வேண்டிய ஒரு முக்கியமான நிவாரணத்தை அளிக்கின்றது.
5வது அட்டவணை
அரசியலமைப்பின் 5வது அட்டவணையானது அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டை மேலாண்மை செய்கின்றது.