மூத்த குடிமக்களின் நலனை நோக்கிய நபர்களின் சேவைகளை அங்கீகரிப்பதற்காக தலைசிறந்த மூத்த குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 2019 ஆம் ஆண்டின் வயோசிரேஸ்த சம்மன் என்ற விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
வயோசிரேஸ்த விருதானது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்டது.
அக்டோபர் 1 ஆம் தேதி சர்வதேச முதியோர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகள் 13 பிரிவுகளில் வழங்கப் படுகின்றன. இந்த விருதுகள் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
இந்த விருதுகள் 2013 ஆம் ஆண்டில் தேசிய விருதுகள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டன.