ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பானது 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர எல்லை என்ற அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டது.
இரைச்சல், பிழம்புகள், பொருத்தமின்மைகள் : அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் (Noise, Blazes, and Mismatches: Emerging Issues of Environmental Concern) என்று இந்த அறிக்கைக்குத் தலைப்பிடப் பட்டது.
இந்தப்புதிய அறிக்கையில், காட்டுத்தீ, ஒலி மாசுபாடு மற்றும் பிற சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் பரவலான சுற்றுச்சூழல் சேதத்தினை ஏற்படுத்தும் எனவும் அவற்றை விரைவாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு கூறியுள்ளது.
பருவநிலை மாற்றம், மாசுபாடு மற்றும் உயிரிப் பல்லுயிர்ப் பெருக்க இழப்பு போன்ற புவியின் மூன்று நெருக்கடி நிலைக்குத் தீர்வு காண்பதற்கான அவசியத் தேவையினை இது எடுத்துரைக்கிறது.
ஒலி மாசுபாடானது “ஒரு கொடூரமானக் கொலையாளி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2002 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கிடையில், சராசரியாக 423 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்புகள் காட்டுத்தீ காரணமாக எரிந்து நாசமானதாக இந்த அறிக்கை கூறுகிறது.