TNPSC Thervupettagam

வருடாந்திர மரணத் தண்டனை அறிக்கை, 2022

February 2 , 2023 533 days 300 0
  • 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள குற்றவியல் அமர்வு நீதிமன்றங்கள் ஆனது 165 மரணத் தண்டனைகளை விதித்துள்ளன.
  • இது கடந்த 20 ஆண்டுகளில் பதிவானவரையில், ஓராண்டில் விதிக்கப்பட்ட மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
  • இந்த எண்ணிக்கை அதிகரிப்பானது, அகமதாபாத்தில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக இருக்கலாம்.
  • இது 2016 ஆம் ஆண்டு முதல் பதிவான, ஒரே வழக்கில் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்வினைக் குறிக்கிறது.
  • 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்றைய நிலவரப்படி, 539 கைதிகள் மரணத் தண்டனை நிறைவேற்றப் படுவதற்கான பட்டியலில் உள்ளனர் என்று இந்த அறிக்கை குறிப்பிடச் செய்கிறது.
  • 400 கைதிகள் மட்டுமே மரணத் தண்டனையை எதிர்நோக்கியதாக பதிவான 2016 ஆம் ஆண்டிலிருந்து, விதிக்கப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலானதாக இந்த எண்ணிக்கை உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட மரணத் தண்டனைகளின் எண்ணிக்கையானது 2015 ஆம் ஆண்டில் பதிவானதை விட 40% அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • இந்தத் தகவல் ஆனது, ‘இந்தியாவில் மரணத் தண்டனை - வருடாந்திரப் புள்ளி விவரங்கள் 2022’ அறிக்கையின் ஒரு பகுதியாகும்.
  • திட்டம் 39A எனப்படும் இது டெல்லியின் தேசியச் சட்டப் பல்கலைக் கழகத்தின் ஆலோசனைக் குழுவினால் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்