ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது, 2022 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி அன்று, அனைவருக்கும் வளமான சுற்றுச்சூழலைப் பெறுவதற்கான உரிமையை அங்கீகரிக்கும் ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
இந்தியா இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள போதிலும் அந்தத் தீர்மான உரையின் செயல்பாட்டு விதிமுறைகள் பத்தியில் சில கருத்து வேறுபாடு எண்ணங்களைக் கொண்டுள்ளது.
தீர்மானத்தின் நடைமுறை மற்றும் பொருள் குறித்து இந்தியா தனது மாற்றுக் கருத்துகளைத் தெரிவித்தது.
1972 ஆம் ஆண்டு ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மாநாடானது, சுற்றுச்சூழலை ஒரு முக்கியப் பிரச்சினையாக மாற்றிய முதல் உலக மாநாடு ஆகும்.