TNPSC Thervupettagam

வளிமக் கரைசல்களின் கதிர்வீச்சு கட்டாயப்படுத்துதல் – வெளிப்புற இமயமலை

June 10 , 2020 1504 days 564 0
  • அண்மையில், ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியலுக்கான ஆராய்ச்சி நிறுவனம்  நடத்திய ஆய்வில், வளிமக்கரைசல்களின் கதிர்வீச்சு கட்டாயப்படுத்துதல் என்ற ஒரு நிகழ்வு கண்டறியப் பட்டுள்ளது. அதாவது  மனிதர்களின் தாக்கத்தால் வளிமக் கரைசல்கள் மேற்கு வெளிப்புற-இமயமலைகளின் உயர்நிலையில் அதிகமாக காணப்படுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
  • வளிமக் கரைசல்களின் கதிர்வீச்சு கட்டாயப்படுத்துதல் என்பது மனிதர்களின் தாக்கத்தால் வளிமண்டலத்தின் மேற்புறத்திலும் மேற்பரப்பிலும் உள்ள கதிரியக்கப் பாய்வுகளில் மற்றும் வளிமண்டலத்திற்குள் இருக்கும் கதிர்வீச்சை உறிஞ்சுவதாகும்.
  • நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியலுக்கான ஆராய்ச்சி நிறுவனமானது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
  • வளிமக் கரைசல்கள் ஒரு வாயு அல்லது திரவச் சூழலில் மிதக்கும் திரவ அல்லது திடமான துகள்களின் ஒரு கலவையாக இருக்கும் என்று வரையறுக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்