A.R. வெங்கடாசலபதி, கனடாவைச் சேர்ந்த தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதிற்கு (இயல் விருது) தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
இவர் சென்னை மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தில் (MIDS) வரலாற்றாசிரியர் மற்றும் பேராசிரியராக உள்ளார்.
தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தை வெளி நாடுகளில் உள்ள மக்களிடம் கொண்டு செல்வதில் இவர் பெரும் பங்கு வகித்தவர் ஆவார்.
கடந்த 40 ஆண்டுகளாக வரலாறு, மொழி, கலாச்சாரம், சமூகம் மற்றும் அரசியல் குறித்து எழுதி வரும் இவர், 60க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நீதியரசர் சந்துருவும் ‘நான் நீதிபதியானேன்’ என்ற புத்தகத்திற்காக இயல் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.