ஐக்கிய இராஜ்ஜியம் - இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையேயான உறவில், தன்னுடையப் பங்களிப்பைச் செலுத்தியதற்காக இலண்டனில் நடைபெற்ற ஐக்கிய ராஜ்ஜியம் - இந்தியா விருதுகள் வழங்கும் விழாவில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் சர் மார்க் துலி என்பவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவர் புது தில்லியில் உள்ள பிபிசி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு 1992 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதும் 2005 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருதும் வழங்கப்பட்டது.