மின்சக்தி வலையமைப்பின் உடைந்த பகுதியை சரிசெய்ய சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியே பெண்கள் குழு ஒன்று மிதந்த போது உலகிலேயே முதல் முறையாகபெண்கள் மட்டுமே பங்கேற்ற விண்வெளி நடைபயணம் என்ற ஒரு வரலாற்றுச் சாதனையை அக்குழு படைத்தது.
இந்த அரை நூற்றாண்டு கால அளவில் விண்வெளியில் முதல் முறையாக “ஆண் துணையின்றி” பெண்கள் ஒரு குழுவாக விண்வெளியில் மிதந்த இந்நிகழ்வில் நாசா விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
35 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் முதல் பெண் விண்வெளி வீரர் கேத்தி சல்லிவன் இந்த அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜெசிகா மீர் விண்வெளிப் பயணத்தை நடத்திய உலகின் 228வது நபராகவும், 15வது பெண்ணாகவும் ஆனார்.
கோச்சிற்கு இது நான்காவது விண்வெளிப் பயணமாகும். அவர் இந்த 11 மாத பயணத்தில் ஏழு மாதங்கள் விண்வெளியில் வசிக்க இருக்கின்றார். இது ஒரு பெண் விண்வெளி வீராங்கனையால் மேற்கொள்ளப்படும் ஒரு மிக நீண்ட கால அளவு கொண்ட வசிப்பிடத் திட்டம் ஆகும்.