கர்நாடக அரசானது வினய சமரஷ்யா யோஜனா என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
இது அந்த மாநிலத்தின் கிராமப் பஞ்சாயத்துகளில் நிலவும் சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு பொது விழிப்புணர்வைப் பரப்புவதற்கான ஒரு பிரச்சாரமாகும்.
இது ஏப்ரல் 14 அன்று டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவின் போது முறையாகத் தொடங்கப்படும்.
2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திய மழையிலிருந்துத் தன்னைக் காப்பதற்காக, கர்நாடகாவின் கோப்பல் என்ற மாவட்டத்திலுள்ள மியாபூர் குக்கிராமத்திலுள்ள ஒரு ஆலயத்தினுள் தஞ்சம் புகுந்த வினய் என்ற 3 வயது தலித் சிறுவனின் நினைவாக இந்த முன்னெடுப்பிற்கு இப்பெயரானது சூட்டப்பட்டுள்ளது.