இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையக அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 50% ஆகக் குறைக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மேலும் இந்தியா புதுதில்லியில் உள்ள இந்தியாவிற்கான பாகிஸ்தான் உயர் ஆணையக அலுவலகத்தில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கையையும் 50% ஆகக் குறைக்க வலியுறுத்தியுள்ளது.
வியன்னா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதைத் தொடர்ந்து இந்தியா இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.