TNPSC Thervupettagam
October 25 , 2018 2126 days 822 0
  • புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர் மம்தா காலியாவிற்கு 27வது வியாஸ் சம்மான் விருது அவரது "டுக்ஹம் சுக்ஹாம்" என்ற நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
  • 2009 ஆம் ஆண்டில் வெளியான டுக்ஹம் சுக்ஹாம் நாவலானது கீழ் நடுத்தர வர்க்க குடும்பத்தின் மூன்று தலைமுறையினரின் சரித்திரமாகும்.
வியாஸ் சம்மான்
  • வியாஸ் சம்மான் விருதானது கே.கே. பிர்லா ஃபவுண்டேஷன் மூலம் 1991ல் நிறுவப்பட்டது.
  • இது முதன்முதலில் கவிஞர் ராம் விலாஸ் ஷர்மாவிற்கு 1991 இல் வழங்கப்பட்டது.
  • இந்தி எழுத்தாளரால் எழுதப்பட்ட சிறந்த இலக்கியப் படைப்புகள் மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியக் குடிமகனால் வெளியிடப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
  • இவ்விருதானது ரூ 3.5 லட்சம் பணப்பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயம் (பதக்கம்) ஆகியவற்றுடன் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்