நாட்டில் முதன்முறையாக, கேரள மாநில அரசானது அம்மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்காக ஒரு நல நிதி வாரியத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்த வாரியமானது “கேரள கர்சாகா சேமநிதி வாரியம்” என்று அழைக்கப் படுகின்றது.
கேரள கர்சாகா சேமநிதிச் சட்டத்தின் படி, விவசாயமானது தோட்டக் கலை, மருத்துவத் தாவரங்களைப் பயிரிடல், நாற்றுப் பண்ணை மேலாண்மை, மீன், அலங்கார மீன், சிப்பி, தேனீக்கள், பட்டுப் புழுக்கள், கோழிப் பண்ணை, வாத்துகள், ஆடுகள், முயல்கள், கால்நடைகள், அது போன்ற வேளாண் பயன்பாடுகள் தொடர்பான நிலப் பயன்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.