2019ம் ஆண்டில் உலக விவாத சாம்பியன்ஷிப்பில் கனடாவை வீழ்த்தி இந்திய அணியானது உலக சாம்பியனாக உருவடுத்திருக்கின்றது.
ஐந்து உறுப்பினர்கள் கொண்ட இந்திய அணி சென்னையின் தேஜாஸ் சுப்பிரமணியத்தை (PSBB பள்ளி) உள்ளடக்கியதாகும்.
தாய்லாந்தில் நடைபெற்ற இப்போட்டியானது 64 நாடுகளிலிருந்து 600 போட்டியாளர்களைக் கொண்டதாகும். மேலும் இதில் பங்கேற்ற இந்திய அணி ஒரு சுற்றில் கூட தோல்வியடையாமல் இருந்ததாக கூறப்படுகின்றது.
ஒரு விரிவான தேர்வு செயல்முறைக்குப் பிறகு, இந்த ஐந்து மாணவர்களையும் இந்திய பள்ளிகள் விவாத சங்கம் தேர்வு செய்து பல மாதங்கள் பயிற்சி அளித்தது.