TNPSC Thervupettagam

விஷ்வகர்மா ராஷ்டிரிய புரஷ்கர் மற்றும் தேசியப் பாதுகாப்பு விருதுகள்

March 11 , 2022 866 days 447 0
  • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், விஷ்வகர்மா ராஷ்டிரிய புரஷ்கர் மற்றும் தேசியப் பாதுகாப்பு விருதுகளை வழங்கி உள்ளார்.
  • இந்த விருதுகளானது 1965 ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தினால் வழங்கப்படுகிறது.
  • விஷ்வகர்மா ராஷ்டிரிய புரஷ்கர் என்ற விருதானது இதற்கு முன்பாக ஷ்ரம் வீர் தேசிய விருதுகள் என அழைக்கப்பட்டது.
  • முந்தைய ஆண்டில் ஊழியர்களால் வழங்கப்பட்டு, ஒரு தொழிற்சாலை நிர்வாகத்தால் அமல்படுத்தப் பட்ட சிறந்த பரிந்துரைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
  • தேசியப் பாதுகாப்பு விருதுகளானது, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் கீழான தொழில்துறை நிறுவனங்கள், கட்டுமானத் தளங்கள், துறைமுகங்கள் மற்றும் நிறுவனங்களின் சிறப்பான பாதுகாப்புச் செயல்பாடுகளுக்கு வேண்டி அங்கீகாரம் அளிக்கும் விதமாக வழங்கப் படுகின்றன.
  • விபத்துகளைத் தடுப்பதில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் ஈடுபாடுகளை ஊக்குவித்து அவர்களை மேம்படுத்தச் செய்வதே இந்த விருது வழங்கப்படுவதன் ஒரு நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்