TNPSC Thervupettagam

வீட்டிலிருந்தபடியே வாக்களித்தல்

March 30 , 2024 111 days 254 0
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது மக்களவை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, மாற்றுத் திறனாளிகள் (PwD) மற்றும் 85 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு ‘வீட்டிலிருந்த படியே வாக்களிக்கும்’ ஒரு வசதியை விரிவுபடுத்தி உள்ளது.
  • இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 85 லட்சத்துக்கும் அதிகமான முதியோர்களும், 88.4 லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகளும் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க முடியும்.
  • படிவம் 12D ஆனது வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க உதவும்.
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி நிலவரப் படி, நாட்டில் 85 வயதிற்கு மேற்பட்ட 81,87,999 முதியோர்களும், 100 வயதிற்கு மேற்பட்ட 2,18,442 வாக்காளர்களும் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்