வீட்டிலிருந்தபடியே வாக்களித்தல்
March 17 , 2023
491 days
255
- கர்நாடகா மாநிலமானது, ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தனது அடுத்த அரசைத் தேர்வு செய்ய தயாராக உள்ளது.
- இதற்காக, வீட்டிலிருந்தபடியே வாக்களித்தல் என்ற விருப்பத் தேர்வினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏதேனும் குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
- தேர்தல் ஆணையம் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வசதியை வழங்குவது இதுவே முதல் முறையாகும்.
- 'சாக்ஷம்' என்ற கைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ள நிலையில், இந்த செயலியில் உள்நுழைந்து வாக்களிக்கும் வசதியை மக்கள் தேர்வு செய்யலாம்.
- 'சுவிதா' என்ற மற்றொரு கைபேசி செயலியும் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
- இது வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனு மற்றும் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கான இணைய தளம் ஆகும்.
- கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி பெறுவதற்கு வேட்பாளர்கள் இந்த தளத்தினைப் பயன்படுத்தலாம்.
Post Views:
255