TNPSC Thervupettagam
January 28 , 2025 26 days 122 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், 12 பேருக்கு அவர்களின் மறைவிற்குப் பின்னதாக வழங்கப்பட்ட விருதுகள் உட்பட ஆயுதப்படைகள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை வீரர்கள் 93 பேருக்கு வீரதீர விருதுகளை வழங்கினார்.
  • இவற்றில் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட ஒரு விருது உட்பட இரண்டு கீர்த்தி சக்ரா விருதுகள்; மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட மூன்று விருதுகள் உட்பட 14 சௌர்ய சக்ரா விருதுகள், ஒரு துணை சேனா பதக்கம் (வீரதீரச் செயல்); மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட ஏழு விருதுகள் உட்பட 66 சேனா பதக்கங்கள்; இரண்டு நவோ சேனா பதக்கம் (வீரதீரச் செயல்) மற்றும் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட ஒரு விருது உட்பட எட்டு வாயு சேனா பதக்கங்கள் (வீரதீரச் செயல்) அடங்கும்.
  • ஆயுதப் படைகள் மற்றும் பிற துறைப் பணியாளர்களுக்கு வேண்டி 305 பாதுகாப்பு விருதுகளையும் குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கினார்.
  • இவற்றில் 30 பரம் விஷிஷ்ட் சேவா பதக்கங்கள்; ஐந்து உத்தம் யுத் சேவா பதக்கங்கள்; 57 அதி விஷிஷ்ட் சேவா பதக்கங்கள்; 10 யுத் சேவா பதக்கங்கள்; சேனா பதக்கத்திற்கு இணையான பதக்கம் (கடமைப்பற்று); 43 சேனா பதக்கங்கள் (கடமைப்பற்று); எட்டு நவோ சேனா பதக்கங்கள் (கடமைப்பற்று); 15 வாயு சேனா பதக்கங்கள் (கடமைப் பற்று); நான்கு விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் 132 விஷிஷ்ட் சேவா பதக்கங்களை குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கினார்.
  • மேலும், எட்டு கடலோரக் காவல்படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவரின் தத்ரக்சக் பதக்கம் மற்றும் தத்ரக்சக் பதக்கத்தினையும் குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கச் செய்தானார்.
  • குடியரசுத் தலைவரின் பதக்கப் பட்டியலில் தமிழக காவல்துறையின் 21 காவல்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
  • ஊர்க்காவல் மற்றும் குடிமைப் பாதுகாப்பு பிரிவின் கீழ், தமிழ்நாடு ஊர்க் காவல் படையின் உதவித் தலைவர் மஞ்சித் சிங் நாயர், மகத்தான சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்