ஜூன் மாத இறுதி வரையில், வெப்ப அலை காரணமாக நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 120 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவைத் தொடர்ந்து குஜராத்தில் 35 பேர், தெலுங்கானாவில் 20 பேர், மகாராஷ்டிராவில் 14 பேர், தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 12 பேர், மேற்கு வங்காளத்தில் 11 பேர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை குறைவான இறப்புகள் பதிவான மாநிலங்கள் இமாச்சலப் பிரதேசம் (9), பீகார் (8), ஒடிசா (7), ஆந்திரப் பிரதேசம் (4) ஆகியனவாகும்.
தேசியத் தலைநகரில் ஒரு உயிரிழப்பு மட்டுமே பதிவாகியுள்ளது.