ஐரோப்பாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட ஒரு வெப்ப அலையின் தாக்கத்தினால் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியைப் பாதித்த வெப்ப அலையானது, ஸ்பெயின் நாட்டினை வாட்டி வதைத்தது.
இது அப்பகுதியின் வெப்பநிலையை 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) வரை உயர்த்தியது.
1975 ஆம் ஆண்டில் நவீனப் பதிவு முறைகள் தொடங்கப்பட்டதிலிருந்து, புவியியல் பரவல் மற்றும் கால அளவு அடிப்படையில் இது மூன்றாவது மிகத் தீவிரமான வெப்ப அலையாகும்.
இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலும் (26 நாட்கள்) 2003 ஆகஸ்ட் மாதத்திலும் (16 நாட்கள்) ஏற்பட்ட இரண்டு வெப்ப அலைகள் மட்டுமே நீண்ட காலம் வரை நீடித்தன.