ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசாங்கத் தலைவர்களுக்கு இடையேயான உச்சி மாநாடு 2020
December 3 , 2020 1372 days 585 0
இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மன்றத்தின் அரசாங்கத் தலைவர்களுக்கு இடையேயான உச்சி மாநாட்டின் (Shanghai Cooperation Organization Council of Heads of Government summit) 19வது கூட்டமாகும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசாங்கத் தலைவர்களின் மன்றமானது தனது உறுப்பு நாடுகளின் பிரதமர்களைக் கொண்டுள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மன்றத்தின் அரசாங்கத் தலைவர்களின் மாநாடானது 7 பிரதமர்களின் பங்களிப்பைக் கண்டது.
இதில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆறு உறுப்பு நாடுகளும், பார்வையாளர் நாடான பெலாரஸும் அடங்கும்.
இந்தக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் பங்கேற்கவில்லை.
இந்த இணைய வழி மாநாட்டிற்கு இந்திய துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்தியா, அதன் சிறப்பு தலைமை உரிமைகளைக் கொண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க துர்க்மெனிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
2017 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முழு நேர உறுப்பினரான பிறகு, இந்தியாவானது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு மட்டத்திலான முதல் கூட்டத்தை நடத்துகிறது.
சுழற்சியின் படி, உஸ்பெகிஸ்தானுக்கு அடுத்த படியாக 2019 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அரசாங்கத் தலைவர்களின் மன்றத்தின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றது.
இந்தியாவின் ஓராண்டு கால அளவிலான பதவிக் காலமானது நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடையும்.
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் “அரசத் தலைவர்கள்” கூட்டத்தில் மோடி அவர்கள் ஏற்கனவே கலந்து கொண்டார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது மொத்தம் 8 உறுப்பு நாடுகளையும் 4 பார்வையாளர் நாடுகளையும் கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மற்றும் மங்கோலியா ஆகியவை அதன் இதர பார்வையாளர் நாடுகளாகும்.