TNPSC Thervupettagam

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் மன்றக் கூட்டம்

November 5 , 2019 1754 days 642 0
  • உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Shanghai Cooperation Organisation - SCO) நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் மன்றத்தின்  18வது கூட்டத்தில் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
  • இந்த மாநாட்டில் பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக அவர் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • இந்தக் கூட்டத்தின் போது, 2020 ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் மன்றத்தின் அடுத்த கூட்டம் இந்தியாவில் நடத்தப் பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
  • இந்த உச்சி மாநாட்டின் போது ரஷ்யாவால் நடத்தப்பட்ட SCO கூட்டு இராணுவப் பயிற்சியான “CENTER 2019” என்ற இராணுவப் பயிற்சியானது  கௌரவப்படுத்தப் பட்டது.
  • SCO ஆனது எட்டு முழு உறுப்பினர் நாடுகளையும் ஆறு "கலந்துரையாடல் நாடுகளையும்" மற்றும் நான்கு "பார்வையாளர் நாடுகளையும்" கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்