2019 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று அனுசரிக்கப்பட்ட சிறந்த புரட்சியாளரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஷாஹீத் உதம் சிங்கின் 120வது பிறந்த தினத்தின் போது இந்தியா அவருக்கு மரியாதை செலுத்தியது.
இவர் 1899 ஆம் ஆண்டில் இந்த தினத்தில் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் பிறந்தார்.
இவர் காதர் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.
1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று பைசாகி திருவிழாவின் (அறுவடைத் திருவிழா) போது அமிர்தசரசில் உள்ள ஜாலியன்வாலாபாக் நகரில் இவரும் இடம் பெற்றிருந்தார்.
ஜெனரல் டயர் என்பவர் நிராயுதபாணியான இந்தக் கூட்டத்தின் மீது எந்தவித முன் எச்சரிக்கையும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்தக் கொடூரமான படுகொலையில் பலர் உயிர் இழந்தனர்.
இவர் 1940 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் மைக்கேல் ஓ டயரை படுகொலை செய்ததன் மூலம் ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பழிவாங்கியதற்காக மிகவும் சிறப்பாக அறியப் படுகின்றார். அதற்காக இவர் லண்டனில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப் பட்டார்.