ஸ்டாக்ஹோம் மாநாட்டிற்கான நிரந்தரக் கரிம மாசுபடுத்திகளின் (POP) மறு ஆய்வுக் குழுவின் (POPRC-18) 18வது சந்திப்பானது இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றது.
இந்த உடன்படிக்கையின் கீழ் பட்டியலிடுவதற்காக மேலும் ஐந்து இரசாயனங்கள் இந்தச் சந்திப்பில் உட்சேர்க்கப்பட்டன.
இதில் பட்டியலிடப்பட்ட அந்த மூன்று இரசாயனங்கள் (குளோரி பைரிஃபோஸ், குளோரினேட்டட் பாரஃபின் (பரிந்துரைக்கப் படுவதற்கு அப்பாற்பட்ட அளவு) மற்றும் நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பு கொண்ட பெர்ஃப்ளூரோ கார்பாக்சிலிக் அமிலங்கள்) ஏற்கனவே POPRC-17 மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்டன.
ஒரு தீ பரவுத் தடுப்பானான டெக்லோரேன் பிளஸ் மற்றும் சில தனிநபர் பராமரிப்புப் பொருட்களில் பயன்படுத்தப்படும் நிலைப் படுத்தியான UV-328 ஆகிய இரண்டு இரசாயனங்கள் இந்த அமர்வில் மதிப்பீடு செய்யப்படும்.
குளோர்பைரிஃபோஸ் என்ற இரசாயத்தினை ஒரு நிரந்தரக் கரிம மாசுபடுத்தியாகப் பட்டியலிட ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு மேற்கொண்ட ஒரு முன் மொழிவிற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
இதில் இந்தியா வாதிட்ட கருத்துகள்
குளோர்பைரிஃபோஸ் ஒரு புற்றுநோய் உண்டாக்கும் காரணி அல்ல, எனவே அதன் செறிவு குறைவாகவே உள்ளது.
POPRC-17 சந்திப்பில் வழங்கப்பட்ட சில ஆய்வு அறிக்கைகள் கூறுகின்ற, குளோர் பைரிஃபோஸ் பாதகமான விளைவுகளைக் கொண்டுள்ளன என்ற கருத்தானது சக மதிப்பாய்வு செய்யப் படவில்லை.
இந்தியாவில் குளோர்பைரிஃபோஸ்
1977 ஆம் ஆண்டு முதல், 1968 ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லிச் சட்டத்தின் கீழ் குளோர் பைரிஃபோஸ் பதிவு செய்யப் பட்டுள்ளது.
மேலும், அனுபம் வர்மா குழுவானது 2015 ஆம் ஆண்டில் இதனைத் தொடர்ந்துப் பயன்படுத்தலாம் என்று கூறி தனது மதிப்பாய்வில் பரிந்துரைத்தது.
2021 ஆம் ஆண்டில் குளோர்பைரிஃபோஸ் வேளாண்மைப் பயன்பாட்டிற்கு வேண்டி அங்கீகரிக்கப் பட்டது.
கொண்டைக் கடலை, அரிசி மற்றும் பருத்தி ஆகியவற்றினைப் பாதிக்கும் பூச்சிகளுக்கு எதிராக இதனைப் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்துவதையும் இது உள்ளடக்கியது.
இந்தியாவில் 18 பயிர்களுக்குப் பயன்படுத்துவதற்காக இது அங்கீகரிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா அரசாங்கங்களால் தடை செய்யப்பட்ட பத்து பூச்சிக் கொல்லிகளில் இதுவும் ஒன்றாகும்.
சீனாவும் இந்தியாவும் குளோர்பைரிஃபோஸ் ரசாயத்தினை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.