ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநரான மனோஜ் சின்ஹா அவர்கள் ஒரு நிகழ்நேரத் தளமான “திறன்மிகு செயல்பாடு மதிப்பீடு அறிக்கைப் பதிவுகள் நிகழ்நேரத் தளம்” என்ற ஒரு தளத்தை (Smart Performance Appraisal Report Recording Online Window – SPARROW) தொடங்கி வைத்துள்ளார்.
இது அதிக வெளிப்படைத் தன்மை, பரிமாற்றத்தின் போது மதிப்பீட்டு அறிக்கைகளின் இழப்பைத் தவிர்த்தல், சிறந்த கண்காணிப்பை உறுதி செய்தல் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆட்சிப் பணி அதிகாரிகளின் மதிப்பீட்டுச் செயல்பாடுகளைக் குறித்த காலத்திற்குள் தீர்த்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது உள்கட்டமைப்பு கொண்ட எச்சரிக்கை நடைமுறைகள் மற்றும் நிகழ்நேர நிலை ஆய்வுகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் காரணமாக இந்த செயல்முறையை தடையற்ற, துரிதமான மற்றும் எளிதான முறையில் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.