இவ்வருடம் ஜனவரி 01-ம் தேதி முதல் ஹைதராபாத் காவல் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஸ்மைல் V நடவடிக்கை தெருக்களில் தொழிலாளர்களாகவோ அல்லது பிச்சைக்காரர்களாகவோ இருந்த 325 குழந்தைகளை மீட்பதில் உதவி புரிந்து இருக்கின்றது.
முஸ்கான் நடவடிக்கை எனவும் அறியப்படும் ஸ்மைல் நடவடிக்கை காணாமல் போன குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளித்திடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கை ஆகும்.
இது ஜனவரி 01-ம் தேதியன்று தெலுங்கானா மாநிலம் முழுவதும் ஆரம்பிக்கப்பட்டது.