சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து ஹங்கேரி விலகுவதாக அறிவித்து உள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணையின் கீழ் தேடப்படும் இஸ்ரேலியத் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு அரசு முறைப் பயணமாக ஹங்கேரிக்கு வந்தார்.
இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் சர்வதேச நீதிமன்றமான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உள்ளது.
ஹங்கேரி நாடானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஸ்தாபன உறுப்பினராகும் என்பதோடு இது அதிலிருந்து வெளியேறும் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாகவும் மாற உள்ளது.
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு பகுதியாக இல்லாத நாடுகளில் அடங்கும் என்பதால் அவை அதன் அதிகார வரம்பை அங்கீகரிக்கவில்லை.