TNPSC Thervupettagam
August 6 , 2020 1483 days 585 0
  • ரபேல் போர் விமானத்திற்காக இந்தியாவிற்கு ஹம்மர் ஏவுகணைகளைவழங்க பிரான்சு முடிவு செய்துள்ளது.
  • ஹம்மர் (Hammer – விரிவுபடுத்தப்பட்ட வரம்புடன் அதிகத் திறன் கொண்ட கூறுநிலை ஏவுகணை) என்பது நடுத்தர வரம்பு கொண்ட வானிலிருந்து நிலத்தில் இருக்கும் இலக்கை நோக்கித் தாக்கும் ஏவுகணையாகும். இது ஏறத்தாழ 60-70 கிலோ மீட்டர் தொலைவில் எந்தவொரு இலக்கையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
  • இது போர்த் தளவாட வான்வெளி-சோல் கூறுநிலை ஏவுகணை வகுப்பைச் சேர்ந்தது ஆகும். அதாவது இது வானிலிருந்து நிலத்தில் இருக்கும் இலக்கைத் தாக்கும் ஒரு வகையிலான கூறுநிலை ஆயுதமாகும்.
  • இந்த ஆயுதம் கூறுநிலை தன்மை கொண்டதாகும். ஏனெனில் இது பல்வேறு வகையான வழிகாட்டு அலகுகள் மற்றும் பல்வேறு வகையான வெடிகுண்டுகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் திறன் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்