2020 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ஹரிவராசனம் விருதுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞரான இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதானது கேரள மாநில அரசால் நிறுவப் பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் நடைபெறும் மகர விளக்கு விழாவிற்கு முன்னதாக ஹரிவராசனம் விருது அறிவிக்கப் படுகின்றது.
விருது பற்றி
இந்த விருது கேரள மாநில அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் ஆகியவற்றால் இணைந்து நிறுவப் பட்டது. மேலும் இது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகின்றது.
முதன் முதலாக 2012 ஆம் ஆண்டில் இந்த விருதைப் பெற்றவர் கே.ஜே.யேசுதாஸ் ஆவார். கடந்த ஆண்டு பாடகர் பி சுசீலாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
மதச்சார்பின்மை மற்றும் உலகளாவிய சகோதரத்துவ உணர்வை இசை மூலம் பரப்புவதற்குப் பங்களித்த நபர்களுக்கு இந்த விருது வழங்கப் படுகின்றது.