TNPSC Thervupettagam
December 30 , 2019 1672 days 618 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க ஹரிவராசனம் விருதுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இசைக் கலைஞரான இளையராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த விருதானது கேரள மாநில அரசால் நிறுவப் பட்டுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் நடைபெறும் மகர விளக்கு விழாவிற்கு முன்னதாக ஹரிவராசனம் விருது அறிவிக்கப் படுகின்றது.

விருது பற்றி

  • இந்த விருது கேரள மாநில அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் ஆகியவற்றால் இணைந்து நிறுவப் பட்டது. மேலும் இது 2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகின்றது.
  • முதன் முதலாக 2012 ஆம் ஆண்டில் இந்த விருதைப் பெற்றவர் கே.ஜே.யேசுதாஸ் ஆவார். கடந்த ஆண்டு பாடகர் பி சுசீலாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • மதச்சார்பின்மை மற்றும் உலகளாவிய சகோதரத்துவ உணர்வை இசை மூலம் பரப்புவதற்குப் பங்களித்த நபர்களுக்கு இந்த விருது வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்