2022 ஆம் ஆண்டானது நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் ஹர் கோபிந்த் கோரானாவின் 100வது பிறந்தநாள் நிறைவைக் குறிக்கிறது.
இவர் இந்தியாவின் ராய்ப்பூர் நகரில் (தற்போது பாகிஸ்தானிலுள்ள ராய்ப்பூர்) 1922 ஆம் ஆண்டு ஜனவரி 09 அன்று பிறந்தார்.
இவர் சர் அலெக்சாண்டர் டோட் என்பவரின் தலைமையின் கீழ் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உறுப்பினர் பொறுப்பினை ஏற்றிருந்த போது நியூக்ளிக் அமிலம் குறித்த ஒரு ஆராய்ச்சியினைத் தொடங்கினார்.
இவர் 1968 ஆம் ஆண்டில் மார்ஷல் W. நிரென்பெர்க் மற்றும் ராபர்ட் W. ஹால்லி ஆகியோருடன் இணைந்து மருத்துவம் அல்லது உடலியல் துறைக்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
1969 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம விபூசன் விருது வழங்கியது.