பழங்குடித் தலைவர்களான சித்து மற்றும் கனு முர்மு ஆகியோரின் நினைவாக ஆண்டுதோறும் ஜூன் 30 ஆம் தேதியன்று ஹல் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.
அவர்கள் 1855 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியன்று, சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் (தற்போதைய ஜார்க்கண்ட்) போக்னாதி என்னுமிடத்தில் சந்தால் ஹுல் (கிளர்ச்சி) நடத்தினர்.
இது பெரும்பாலும் “இந்தியச் சுதந்திரத்திற்கான முதல் போர்” என்றும் குறிப்பிடப் படுகிறது.
இந்த கிளர்ச்சியானது, செழிப்பான டாமின்-இ-கோ பகுதியில் நடைபெற்றது.
சந்தால் மக்கள் அல்லது சந்தாலி இனத்தவர், நவீன கால சந்தால் பர்கானா பகுதியில் முதலில் குடியேறிய குடிமக்கள் அல்லர்.
இந்த இனத்தினர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்காலம் முதல் பிர்பூம் மற்றும் மன்பூம் பகுதிகளிலிருந்து (இன்றைய வங்காளத்தில்) இடம்பெயர்ந்தனர்.