TNPSC Thervupettagam

ஹைஃபா போரின் 105வது ஆண்டு நிறைவு

October 1 , 2023 292 days 231 0
  • முதலாம் உலகப் போரின் போது, ஓட்டோமான் பேரரசுக்கு எதிரான சினாய் மற்றும் பாலஸ்தீனப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஹைஃபா போர் நடத்தப்பட்டது.
  • முக்கியமாக போரில் ஈடுபட்ட மைசூர், ஹைதராபாத் மற்றும் ஜோத்பூர் ஆகிய மூன்று இந்தியக் குதிரைப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இந்திய ராணுவம் ஆனது ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 23 ஆம் தேதியினை 'ஹைஃபா தினமாக' அனுசரிக்கிறது.
  • 15வது (அரசுக் காவல்பணி) குதிரைப்படைப் வீரர்கள் அடங்கிய படைப்பிரிவானது, முக்கியமான துறைமுகங்களைக் கைப்பற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் இதில் பெரும்பாலும் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
  • தல்பத் சிங் ஷெகாவத் "ஹைஃபாவின் நாயகன்" என்ற அழியாதப் புகழைப் பெற்றார்.
  • இந்தப் போர் காரணமாகப் பின்வரும் நிகழ்வுகள் நடைபெற்றன:
  • ஒட்டோமான் பேரரசின் பிரிவினை,
    • 1923 ஆம் ஆண்டில் துருக்கியக் குடியரசின் உருவாக்கத்திற்கும், 1932 ஆம் ஆண்டில் ஈராக் இராட்சியத்தின் உருவாக்கத்திற்கும் வழி வகுத்தது,
    • 1943 ஆம் ஆண்டில் லெபனான் குடியரசு உருவாக்கம்,
    • 1946 ஆம் ஆண்டில் ஜோர்டானின் ஹாஷிமைட் இராட்சியம் மற்றும் சிரிய அரபு குடியரசு உருவாக்கம் மற்றும்
    • 1948 ஆம் ஆண்டில் இஸ்ரேல் நாடு ஆகியவற்றின் உருவாக்கம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்