TNPSC Thervupettagam

ஹைபிரிட் மின் உற்பத்தி திட்டம்

December 6 , 2017 2416 days 841 0
  • ஆந்திரப் பிரதேச அரசானது மின்கல சேமிப்பு மற்றும் பின்னளிப்பு உடைய சூரிய மற்றும் காற்று ஆற்றல் இணைந்த (Hybrid) மின் உற்பத்தி திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
  • இந்த வகையிலான திட்டம் இந்தியாவில் ஏற்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும் இதுவே உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய சூரிய மற்றும் காற்று ஆற்றல் இணைந்த மின் உற்பத்தி பூங்கா ஆகும்.
  • இது ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.
  • இத்திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி  வழங்க உள்ளது.
  • மொத்த 160 மெகாவாட் உற்பத்தியில், 120 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி மூலமும், 40 மெகாவாட் காற்றாலைகள் (Wind Turbines) மூலமும் உற்பத்தி செய்யப்படும்.
  • சோலார் மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றலானது மின் கட்டமைப்புகளுக்கு (Grid) பரிமாற்றப்படுவதற்கு பதிலாக ஹைட்ரஜன் மின்கலன்களில் சேமிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்