ஒடிசா மாநில முதல்வர் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ‘ஒடிசா-மோ பரிவார்’ (ஒடிசா என் குடும்பம்) என்ற தனது கட்சியின் ஒரு சமூக சேவை முன்னெடுப்பைத் தொடங்கினார்.
இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இரத்த தானம் மற்றும் ஆபத்துக் காலத்தில் ஒடிசா மக்களின் நலனை ஊக்குவிப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஒடிசா மக்களை மீட்பதற்கும் உதவும்.
இந்த முயற்சி மறைந்த ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏற்படுத்தப் பட்டுள்ளது.