TNPSC Thervupettagam

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்த குழு

September 4 , 2023 322 days 229 0
  • சட்ட அமைச்சகம் ஆனது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
  • இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பொறுப்பு ஏற்றுள்ளார்.
  • இக்குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மற்றும் பலர் உள்ளிட்ட ஏழு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • இந்தக் குழுவானது, உடனடியாகச் செயல்படத் தொடங்கி, விரைவில் தனது பரிந்துரைகளை வழங்கும்.
  • தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுவானது, ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நான்காவது குழுவாக இருக்கும்.
  • முன்னதாக, இது குறித்து சட்ட ஆணையம், நிதி ஆயோக் அமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலைக்கு ழு ஆகியவற்றினால் விவாதிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்