4,000க்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் பணிக்குச் செல்லும் தாய்மார்களின் குழந்தைகளுக்காக “கோசினா மனே” என்றத் திட்டத்தினைக் கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.
“கோசினா மனே” என்பது தமிழில் குழந்தைகள் நல இல்லங்கள் அல்லது குழந்தைகள் காப்பகம் என்று அழைக்கப் படுகின்றன.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணி புரியும் தாய்மார்களின் குழந்தைகளுக்குச் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் அதன் மீது பாதுகாப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இது இந்த மையங்களின் அருகில் வசிக்கும் மற்ற தாய்மார்களுக்கும் அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.