சந்திரயான் 3 விண்கலம் நிலவினைத் தொட்ட பகுதி ‘சிவசக்தி’ என்று அழைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
சந்திரயான் 2 விண்கலம் தடம் பதித்த இடமானது ‘திரங்கா’ என்று அழைக்கப்படும்.
சந்திரயான்-3 விண்கலத்தின் தரையிறங்கு கலம் சந்திரனின் மேற்பரப்பைத் தொட்ட ஆகஸ்ட் 23 ஆம் தேதியானது, "தேசிய விண்வெளி தினமாக" கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்.