TNPSC Thervupettagam

‘தோழி’ திட்டம்

November 10 , 2019 1715 days 1773 0
  • தோழி என்ற திட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் (போக்ஸோ வழக்குகள்) பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க 70 பெண் காவலர்களை சென்னை நகர காவல்துறை நியமித்துள்ளது.
  • சென்னையில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் 35 உள்ளன. அவற்றின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தோழி திட்டத்திற்கு இரண்டு பெண் காவலர்கள் நியமிக்கப் படுவார்கள்.
  • பெண் காவலர்கள் போக்ஸோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர்கள் கண்காணிப்பார்கள்.
  • பாதுகாப்பின் அடையாளமாக நிர்பயா சின்னத்துடன் பதிக்கப்பட்ட இளஞ்சிவப்புப் புடவைகள் பெண் காவலர்களுக்கு வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்