TNPSC Thervupettagam

‘பிரலய்’ உந்துவிசை ஏவுகணை

December 24 , 2022 576 days 409 0
  • இந்திய ஆயுதப் படைகள் ஆனது தற்போது ‘பிரலய்’ எனப்படும் ஒரு உந்துவிசை வகை ஏவுகணையை வாங்கத் தயாராக உள்ளன.
  • இது 150 முதல் 500 கிமீ வரை உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆனது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த நிலம் விட்டு நிலம் பாயும் ஏவுகணையான ‘பிரலய்’ வகை ஏவுகணையின் முதல் ஏவுதல் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • இது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் A.P.J. அப்துல் கலாம் தீவில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
  • பிரலய் ஏவுகணையானது திட உந்துசக்தி ஏவுகல விசைப்பொறி மூலம் இயக்கப் படுகிறது.
  • இந்தப் புதிய ஏவுகணையானது நிர்ணயிக்கப்பட்ட பகுதியளவு உந்துவிசை பாதையைப் பின்பற்றியதோடு அதிக அளவு துல்லியத்துடன் நிர்ணயிக்கப்பட்ட ஒரு இலக்கை அடைந்து, கட்டுப்பாடு, வழிகாட்டுதல் மற்றும் அதற்கான செயல்பாட்டு வழி முறைகளில் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்