கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியரிங் லிமிடெட் (GRSE) நிறுவனமானது, ‘ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார்’ விருதினைப் பெற்றுள்ளது.
2021-22 ஆம் ஆண்டிற்கான ‘C’ பகுதியில், பொதுத் துறை நிறுவனங்களின் கீழ் அலுவல் மொழியைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.
அலுவல் மொழி அமலாக்கத் துறையில் இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருது இதுவாகும்.
GRSE நிறுவனம் ஆனது 2011-2012, 2012-2013, 2014-2015, 2015-2016 மற்றும் 2016-2017 ஆகிய ஆண்டுகளில் சிறந்த அலுவல் மொழி அமலாக்கத்திற்கான ‘ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார்’ விருதினைப் பெற்றுள்ளது.