இந்திய வானிலை ஆய்வு மையமானது, சமீபத்தில் தனது "2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பருவநிலை" என்ற அறிக்கையை வெளியிட்டது.
1901 ஆம் ஆண்டில் இந்தியாவில் நாடு தழுவிய பதிவுகள் மேற்கொள்ள தொடங்கியது முதல் 2021 ஆம் ஆண்டு தான் இந்தியாவின் ஐந்தாவது வெப்பமான ஆண்டு என இந்த அறிக்கை கூறுகிறது.
2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளால் இந்தியாவில் 1,750 என்ற அளவில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
350 என்ற அளவிலான உயிரிழப்புகள் பதிவானதுடன், மகாராஷ்டிரா மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாநிலமாக உள்ளது.
அங்கு தீவிரமான வானிலை நிகழ்வுகளில், மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைப் பொழிவே அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தன.
அதைத் தொடர்ந்து வெள்ளம், கனமழை, நிலச்சரிவு ஆகியவை உள்ளன.
இந்தியாவில் வருடாந்திர சராசரி வெப்பநிலையானது 1901-2021 ஆம் காலகட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு 0.63 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உயர்வைக் கண்டுள்ளது.
1961-2010 காலகட்டத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் 2021 ஆண்டில் ஏற்பட்ட வருடாந்திர சராசரி மழைப்பொழிவானது அதன் நீண்ட கால சராசரி என்ற அளவில் 105% ஆகும்.