இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் “2023 ஆம் ஆண்டிற்கான பூமி சம்மான்” விருதினை வழங்கினார்.
இது நிலப் பதிவேடு ஆவணங்களை எண்ணிம மயமாக்குவதற்கு என்று மேற்கொண்ட முயற்சிகளுக்காக 68 மாவட்டங்களின் 9 செயலாளர்கள் மற்றும் அதன் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப் படுகிறது.
எண்ணிம இந்தியா நிலப் பதிவேடு ஆவணங்களை நவீனமயமாக்கல் திட்டத்தினைச் செயல்படுத்துவதில் பல தனிநபர்கள் மற்றும் குழுக்களின் சிறந்தச் செயல்திறனை அங்கீகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நிலப் பதிவேடு ஆவணங்களை எண்ணிம மயமாக்கும் செயல்முறையானது முழுமையாக நிறைவடைய வேண்டும் என்ற ஒரு இலட்சிய இலக்கினை நில வளத் துறை நிர்ணயித்துள்ளது.