மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு சமீபத்தில் அமெரிக்காவின் கேபிடல் கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆனது “மனிதநேயத்திற்காக இந்தியா” என்ற முன்முயற்சியை அறிமுகப்படுத்தியது.
இதன் கீழ், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நிதி உதவியுடன் கூடிய திட்டங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட பல்வேறு நாடுகளில் செயற்கை மூட்டுப் பொருத்துதல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இந்த முன்முயற்சிக்காக, ஜெய்ப்பூர் காலணியின் பெற்றோர் அமைப்பான புகழ்பெற்ற தொண்டு நிறுவனமான பகவான் மகாவீர் விக்லாங் சஹாயதா சமிதி (BMVSS) உடன் MEA ஒத்துழைத்துள்ளது.
BMVSS பற்றி
இது 1975 ஆம் ஆண்டில் தேவேந்திர ராஜ் மேத்தாவால் நிறுவப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
இந்நிறுவனத்தின் வர்த்தக முத்திரை உறுப்புகளில் ‘ஜெய்ப்பூர் காலணியானது’ பிரபலமாக அறியப்படுகின்றது.
செயற்கை மூட்டு, இடுக்கிகள் மற்றும் பிற உபகரணங்களை மாற்றுத்திறன் கொண்டவர்களுக்குப் பொருத்துகின்ற உலகின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற அமைப்பு இதுவாகும்.