ஜப்பானிய அரசு சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஜப்பானிய மொழி ஆசிரியரான சியாமளா கணேஷ் அவர்களுக்கு “Order of Rising Sun” (உதிக்கும் சூரியனின் ஆணை) என்ற விருதினை வழங்கியது.
ஜப்பானியக் கலாச்சார மேம்பாடு, சர்வதேச உறவுகளில் சாதனை, அவர்கள் துறையின் முன்னேற்றம், மற்றும் சுற்றுச்சூழல் வளங்காப்பு போன்றவற்றில் மகத்தான பணி ஆற்றியவர்களுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது ஜப்பானிய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதாகும்.