2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தில்லி அரசு “டெங்கு மற்றும் சிக்குன்குனியா” ஆகியவற்றிற்கு எதிராக 10 வார கால அளவுள்ள மிகப் பெரிய கொசு எதிர்ப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
இந்தப் பிரச்சாரம் கொசுக்களின் பரவலைத் தடுப்பதில் குடியிருப்பாளர்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது ‘10 ஹப்தே, 10 பாஜே, 10 நிமிடம் - ஹர் ரவிவர், டெங்கு பார் வார் ’என்று தலைப்பிடப் பட்டுள்ளது.
இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, டெங்குக் கொசுக்களை ஒழிப்பதற்காக தில்லி மக்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணிக்கு 10 நிமிடங்கள் தங்கள் வீடுகளில் தேங்கி இருக்கும் அனைத்து நீர் ஆதாரங்களையும் சரி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்.
டெங்கு கொசுக்கள் சுத்தமான நீரில் மட்டுமே உற்பத்தியாகின்றன.