TNPSC Thervupettagam

100 பில்லியன் டாலர் பண வரவு

December 9 , 2022 589 days 298 0
  • 2022 ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலர்கள் மதிப்பிலானப் பண வரவினைப் பெற்ற உலகின் முதல் நாடு இந்தியாவாகும்.
  • கடந்த ஆண்டு பதிவான 7.5 சதவீதமாக இருந்த இந்தியாவின் பண வரவானது 12 சதவீதமாக அதிகரிக்கும் என்று உலக வங்கி கூறியுள்ளது.
  • அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிக சம்பளம் பெறும் இந்தியப் புலம்பெயர்ந்தோரின் பெரும் பங்கே இந்த சாதனைக்கு காரணம் ஆகும்.
  • இந்தியாவின் பண வரவானது, 2022 ஆம் ஆண்டில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தினை விஞ்சி இந்தியாவிற்கு அதிகப் பண வரவினை வழங்கும் மூல ஆதார நாடாக அமெரிக்கா சமீபத்தில் உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்