TNPSC Thervupettagam

10,000 புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பதிவு செய்த முதல் மாவட்டம்

February 6 , 2023 530 days 332 0
  • பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பதிவு செய்த கேரளாவின் முதல் மாவட்டமாக எர்ணாகுளம் மாறியுள்ளது.
  • திருச்சூர், மலப்புரம் போன்ற பிற மாவட்டங்களும் இந்த எண்ணிக்கையை நெருங்கி வருகின்றன.
  • கேரள மாநில அரசானது, அதன் 2022-23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் போது நிறுவனங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கியது.
  • மேலும், அம்மாநில அரசானது 2022-23 ஆம் நிதியாண்டை நிறுவனங்களின் ஆண்டாக அறிவித்தது.
  • மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் மேம்பாட்டினை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்