TNPSC Thervupettagam

11 ஆம் நூற்றாண்டு விஷ்ணு கோயில்

March 2 , 2024 139 days 247 0
  • தமிழ்நாடு தொல்லியல் துறையானது விஷ்ணு கோவிலில் வளங்காப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
  • விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே அமைந்த உலகபுரத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.
  • இந்தக் கோயில் கி.பி 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிற நிலையில், அப்போது இந்தக் கிராமம் உலகமாதேவிபுரம் என்று அழைக்கப்பட்டது.
  • இது சோழ மன்னன் முதலாம் இராஜ இராஜனின் இராணியின் பெயரால் அழைக்கப் படுகிறது.
  • இக்கோயிலில் சோழ மன்னன் முதலாம் இராஜேந்திரனின் கல்வெட்டுகள் காணப் படுவதோடு, மேலும் அந்தக் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய பல பதிவுகளும் அங்கு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்