12 பாதுகாக்கப்பட்ட தளங்கள் – தமிழ்நாடு
April 21 , 2025
4 days
102
- மொத்தம் 12 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் /தளங்களாக அறிவிக்கப்பட உள்ளன.
- பின்வரும் இடங்கள் ஆனது பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் / தளங்களாக அறிவிக்கப்பட உள்ளன:
- திருநெல்வேலி மாவட்டத்தின் மன்னார்கோயிலில் உள்ள தமிழி கல்வெட்டுகள்,
- சிவகங்கை மாவட்டம் அரளிப்பட்டியில் உள்ள குடைவரை,
- திண்டுக்கல் மாவட்டத்தில் கூத்தபூண்டியன் வலசு,
- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள V.கோட்டையூர்,
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லச்சந்திரத்தில் உள்ள கல் திட்டைகள்,
- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள அரண்மனை
- நரிக்குடியில் உள்ள மறையூர் சத்திரம் மற்றும் இராஜபாளையம் தாலுக்காவில் உள்ள மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள கற்பாறை மற்றும் குகை ஓவியங்கள்,
- விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் மற்றும் பிள்ளையார் நத்தத்தில் உள்ள பழைய மண்டபங்கள்
- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏவூர், மற்றும்
- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாயனூர்
- மதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டுகளுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

Post Views:
102